Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (08:24 IST)
காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
 
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
இந்த தாக்குதலில் முதலில் 18 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் படுகாயம் அடைந்த பல வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்து 44 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. மேலும் காயமடைந்த வீரர்களில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
இவர்களின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடுகிறது. 
 
ஒழிந்திருந்து கேவலமான தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments