Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டி.டி.எஃப். வாசன்

Advertiesment
TTF Vasan
, வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:18 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து  தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன். அவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிபதி கேள்வி