Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:14 IST)
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி சீலாம்பூர் பகுதியில், உள்ள கே பிளாக் என்னும் குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் 10 க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரை தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments