Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 வயது குழந்தையை ரூ.4.5 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி திருமணம்.. 38 வயது நபர் மீது வழக்குப்பதிவு..!

7 வயது குழந்தையை ரூ.4.5 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி திருமணம்.. 38 வயது நபர் மீது வழக்குப்பதிவு..!
, வியாழன், 25 மே 2023 (07:34 IST)
ஏழு வயது குழந்தையை ரூபாய் 4.5 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம்  செய்த 38 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் பூபால் சிங் என்ற 38 வயது நபர் சமீபத்தில் ஏழு வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் அவரது வீட்டில் விசாரணை செய்தபோது அவர் சிறுமியின் பெற்றோருக்கு 4.5 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி அதன் பின் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து போலீசார் சிறுமியை மீட்டு திருமணம் செய்த பூபால் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 7 வயது சிறுமியை ரூ.4.5 லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

KYC இருந்தால் மட்டுமே ரூ.2000 மாற்ற முடியுமா? வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதம்..!