Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றாவது அணியாக வெளியேறிய பஞ்சாப்… ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு?

Advertiesment
Dhawan
, சனி, 20 மே 2023 (09:37 IST)
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில்,ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த  ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதை 19.4 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். இனி மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து அந்த அணிக்கு ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்புள்ளது.

ஆனால் நேற்றைய போட்டியில் தோற்ற பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் முழங்கால் பிரச்சனை இன்னும் குணமாகவில்லை… மைக் ஹஸ்ஸி தகவல்!