Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் மேலும்ம் 3 தீவிரவாதிகள் வசிப்பிடங்கள் தகர்ப்பு! - இந்திய ராணுவம் அதிரடி!

Prasanth Karthick
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (09:18 IST)

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

 

கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையாடி வருகிறது.

 

இந்த தேடுதல் வேட்டையின்போது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த அடில் உசேன் தோகர், ஆஷிப் ஷேக் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் தேடி அழிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன் தினம் நடந்த தேடுதலில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதியான ஷாஹித் அகமது குட்டாயின் வீடும், ஜாகிர் அகமது கனியின் வீடும் தகர்க்கப்பட்டன.

 

நேற்று ஸ்ரீநகர் பகுதியில் 12 இடங்களில் இந்திய ராணுவம் சோதனை நடத்தியது. அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து அழித்துள்ளனர். மேலும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments