Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

Prasanth K
செவ்வாய், 24 ஜூன் 2025 (08:53 IST)

பள்ளியில் படிக்க வந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மவுர் மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். 8 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்த அவர் அப்பள்ளி மாணவிகளிடம் அடிக்கடி சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். பல மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளார்

 

ஒரு கட்டத்திற்கும் மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவிகள் நேரடியாக பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். 24 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அந்த புகாரை பள்ளி முதல்வர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

 

அதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக கணித ஆசிரியரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

சிந்து நதிநீரை திறந்துவிடாவிட்டால் இந்தியாவுடன் போர்: பிலாவல் பூட்டோ ஆவேசம்..!

ஈரான் - இஸ்ரேல் போரை நான் நிறுத்திவிட்டேன்: திருந்தாத டிரம்ப்

வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்றினால் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பழிக்கு பழி.. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்