Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூடூத் உதவியால் விடையை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது: உபியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:01 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் போன்றவற்றின் புளூடூத் உதவியால் தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வு மையத்திற்கு வெளியே ஒரு காரில் இருந்து கொண்டு ப்ளூடூத் உதவியால் ஒருசிலர் தேர்வு மையத்தில் இருந்த சிலருக்கு பதில் கூறியதாக தெரிகிறது. அந்த பதிலை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தேர்வு எழுதியவர்கள் பனியனுக்குள் சிறிய மைக்கை  மறைத்து வைத்து இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் காதுக்குள் வைக்கப்பட்டிருந்த ப்ளூடூத் கருவியும் மிகவும் சிறிதாக இருந்ததால் அது வெளியே தெரியவில்லை.
 
இதனை அடுத்து தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் வேறு சிலருக்கும் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments