Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூடூத் உதவியால் விடையை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது: உபியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:01 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் போன்றவற்றின் புளூடூத் உதவியால் தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வு மையத்திற்கு வெளியே ஒரு காரில் இருந்து கொண்டு ப்ளூடூத் உதவியால் ஒருசிலர் தேர்வு மையத்தில் இருந்த சிலருக்கு பதில் கூறியதாக தெரிகிறது. அந்த பதிலை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தேர்வு எழுதியவர்கள் பனியனுக்குள் சிறிய மைக்கை  மறைத்து வைத்து இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் காதுக்குள் வைக்கப்பட்டிருந்த ப்ளூடூத் கருவியும் மிகவும் சிறிதாக இருந்ததால் அது வெளியே தெரியவில்லை.
 
இதனை அடுத்து தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் வேறு சிலருக்கும் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments