புளூடூத் உதவியால் விடையை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது: உபியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:01 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் போன்றவற்றின் புளூடூத் உதவியால் தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வு மையத்திற்கு வெளியே ஒரு காரில் இருந்து கொண்டு ப்ளூடூத் உதவியால் ஒருசிலர் தேர்வு மையத்தில் இருந்த சிலருக்கு பதில் கூறியதாக தெரிகிறது. அந்த பதிலை கேட்டு தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தேர்வு எழுதியவர்கள் பனியனுக்குள் சிறிய மைக்கை  மறைத்து வைத்து இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் காதுக்குள் வைக்கப்பட்டிருந்த ப்ளூடூத் கருவியும் மிகவும் சிறிதாக இருந்ததால் அது வெளியே தெரியவில்லை.
 
இதனை அடுத்து தேர்வு எழுதிய 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் வேறு சிலருக்கும் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments