Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:52 IST)
டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
 
கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்தி வெளியானது. 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது மேலும்  ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments