Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

Mahendran
வெள்ளி, 3 ஜனவரி 2025 (16:50 IST)
19 வயது இளம் பெண் இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 19 வயது அங்கூர் என்ற இளம் பெண் டிசம்பர் 29 ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார். அவரது நேரலையை சுமார் 20க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் நேரலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது நேரலையை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,  அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தடுக்க முயன்றனர். மேலும், சிலர் அவர் வீட்டிற்கு விரைந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள், அங்கூர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவரது பெற்றோர் ஹைதராபாத்தில் கூலி தொழிலாளர்களாக இருப்பதாகவும், காதலில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கூர் மொபைல் போனில் தான் நேரத்தை செலவிடுவார் என்றும் கிராம மக்கள் கூறிய நிலையில், அவருடைய செல்போனை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவருடைய காதலன் யார் என்பதை கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிர முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments