Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: உடனடியாக மூடப்பட்ட பள்ளி!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (07:55 IST)
கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அந்த பள்ளி உடனடியாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களில் சிலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அந்த மாணவ மாணவிகளை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மற்ற மாணவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உடனடியாக பள்ளி மூடப்பட்டதாகவும் பள்ளி வளாகம் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மீண்டும் பள்ளி திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments