Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

Prasanth Karthick
வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:07 IST)

இந்திய எல்லைப்பகுதிகளை வான்வழியாக கண்காணிக்கவும் பாதுகாக்கவும் 150 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் நில எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செயற்கைக்கோள்களை நிறுவி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தில் இயங்கி வருகிறது.

 

தற்போது இந்திய அரசுக்காக சுமார் 70க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அவை 7500 கி.மீ பரப்பு கொண்ட இந்திய கடற்கரைகளையும், நில எல்லையையும் கண்காணிப்பதற்கு போதுமானதாக இல்லை என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பை முன்னிருத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 100 முதல் 150 புதிய செயற்கைக்கோள்களை நிறுவ உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments