Publish Date: Thu, 29 Apr 2021 (08:27 IST)
Updated Date: Thu, 29 Apr 2021 (08:51 IST)
கொரோனா பரவல் அதிகமாக பரவலில் உள்ள 150 மாவட்டங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
மிக வேகமாக பரவி வரும் நிலையில் எப்படியாவது பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. ஆனால் மறுபடியும் முழு லாக்டவுன் அறிவிகக்ப்பட்டால் அது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்பதால் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களில் மட்டும் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர லாக்டவுன் போடலாம் என டெல்லியில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.