Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏஎன் 32 ரக விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழர்!

ஏஎன் 32 ரக விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழர்!
, வெள்ளி, 14 ஜூன் 2019 (16:25 IST)
ஏஎன் 32 ரக விமானப்படை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் தமிழகத்தை சேர்ந்தவரும் ஒருவர் என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
ஜூன் 3 ஆம் தேதி ஏ.என்.32 ரக விமானம்  அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்த நிலையில் அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் இந்த விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த 13 பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டது. இந்த உடல்களின் அடையாளர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் பலியான 13 பேர்களில் கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கடந்த 2011 முதல் வினோத் ஹரிஹரன் விமானப்படையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச சலுகை வழங்கக்கூடாது: பிரதமருக்கு மெட்ரோமேன் கடிதம்