Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டது: சீரம் நிறுவனம் தகவல்

Advertiesment
vaccine
, வெள்ளி, 21 அக்டோபர் 2022 (14:00 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்த சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்றும் அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதே இதற்கு காரணம் என்ற நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது என்றும் அதனால் தடுப்பு ஊசி தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்து வரி செலுத்த கால அவகாசம்: எத்தனை நாட்கள்நீட்டித்தது சென்னை மாநகராட்சி?