Publish Date: Fri, 10 Feb 2023 (09:38 IST)
Updated Date: Fri, 10 Feb 2023 (14:35 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 235 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 565 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 80 புள்ளிகள் சரிந்து 17813 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.