பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
புதன், 11 செப்டம்பர் 2024 (10:55 IST)
நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெற்ற நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்த்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் ஆகி வரும் நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்து 82008 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 64 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக பங்குச்சந்தை ஏற்றத்தில் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் எச்டிஎப்சி வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments