Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே இடத்திலேயே நிற்கும் சென்செக்ஸ், நிப்டி.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

share

Siva

, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (10:50 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நேற்றைய விலையில் தான் கிட்டத்தட்ட பங்குச்சந்தை வர்த்தகம் ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று வெறும் ஐந்து புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 81,719 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,013 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
பங்குச்சந்தையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களையும் பங்கின் விலை கிட்டத்தட்ட நேற்றைய விலை இன்றும் விற்பனை ஆகி வருகிறது என்பதும் இன்று பெரிய அளவில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி, உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, மணப்புரம் கோல்டு, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமில்லை.. என்ன காரணம்?