Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த வாரமே சரியில்லை.. மீண்டும் 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..!

இந்த வாரமே சரியில்லை.. மீண்டும் 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..!

Siva

, வியாழன், 9 மே 2024 (10:47 IST)
இந்த வாரம் தொடங்கியது முதலில் பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தேர்தல் முடிவு வெளியாகும் வரை இப்படித்தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 
 
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்ததால் ஏராளமாக நஷ்டம் அடைந்துள்ள முதலீட்டாளர்கள் இன்றும் சரிந்து உள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 535 புள்ளிகள் சார்ந்த 72,935 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை அண்ணனுக்கு 163 புள்ளிகள் சரிந்து இருவத்தி 22,138  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஒரு சில பங்குகளை தவிர கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் சரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை உச்சம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை சரிவு, வெள்ளி விலை அதிகரிப்பு.. இன்றைய சென்னை நிலவரம்..!