Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. போர் காரணமா?

ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. போர் காரணமா?
, வியாழன், 12 அக்டோபர் 2023 (10:39 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.300க்கும் மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இஸ்ரேல் போர் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5410.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 304 அதிகரித்து ரூபாய் 43280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5880.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து  ரூபாய் 75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து கணவனை கட்டிப்பிடித்தபடி பைக்கில் பயணம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!