Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏறிய வேகத்தில் இறங்கும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (09:49 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் மந்தமான வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென பங்குச்சந்தை சரிவில் இருந்தது.

இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை ஆரம்பத்திலேயே 600 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனை அடுத்து ஏறிய வேகத்தில் பங்குச்சந்தை இறங்கி வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 585 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 710 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 172 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 376 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்து வருவதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் சரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக வங்கி பங்குகள் ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments