Publish Date: Tue, 28 Mar 2023 (10:04 IST)
Updated Date: Tue, 28 Mar 2023 (16:53 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை நேற்றைய நிலையில் இருந்து சிறிது உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9 மணிக்கு பங்கு சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 57,664 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 12 புள்ளிகள் சரிந்து 16,973 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று பங்குச்சந்தை சரியவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே புதிதாக வர்த்தகம் செய்பவர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஏற்றத்திற்கு செல்ல இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்