Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
புதன், 31 மே 2023 (10:19 IST)
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று ஏறிய வேகத்தில் இறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 62710 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை 65 புள்ளிகள் சரிந்து 18,562 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாள் பங்குச்சந்தை ஏறிய நிலையில் திடீரென புதன்கிழமை இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இனி வருங்காலத்தில் பங்குச்சந்தை ஏற்றமடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
பங்குச்சந்தை இறங்கும் போதெல்லாம் வாங்குவதற்கான வாய்ப்பாக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments