Publish Date: Thu, 25 May 2023 (10:17 IST)
Updated Date: Thu, 25 May 2023 (10:19 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது நாளாக சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 61,701 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 25 புள்ளிகள் சரிந்து 18,262 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளதால் மாலை வரை சரிவில்தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் அணிந்து உள்ளனர்.
எனவே இன்று வர்த்தகம் செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்