நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (09:33 IST)
நேற்று பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென சென்செக்ஸ் சரிந்து உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 62,243 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 18,376 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிப்டி நேற்றைவிட இன்று 25 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று கவனத்துடன் முதலீடு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..

பயிர்க்கடன் ரத்து!. தஞ்சாவுர் கூட்டத்தில் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்!..

விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தவர் விபத்தில் பலி?.. இதுக்கு இல்லையா எண்டு!...

ஒரே நாளில் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடியில் இருந்து திடீரென வெளியேற்றம்.. என்ன காரணம்?

ஈரான் போருக்காக ரூ. 83 லட்சம் கோடி செலவு செய்யும் டிரம்ப்.. வரி செலுத்தும் மக்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments