Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 15 மே 2023 (09:52 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தின் மூன்று நாட்கள் பங்குச்சந்தை ஏற்றத்திலும் இரண்டு நாட்கள் சரிவிலும் இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 62200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 50 புள்ளிகள் உயர்ந்து 18,366 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் இந்த வாரம் முழுவதும் பாசிட்டிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் சரியான முதலீட்டு ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின் வர்த்தகம் செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments