Publish Date: Wed, 08 Mar 2023 (09:46 IST)
Updated Date: Wed, 08 Mar 2023 (09:48 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததன் காரணமாக ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிந்தது என்பதும் இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறையாகும். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 54 என்ற புள்ளிகளில் வருத்தமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 புள்ளிகள் குறைந்து 17660 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.