Publish Date: Mon, 06 Mar 2023 (09:45 IST)
Updated Date: Mon, 06 Mar 2023 (09:46 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்ததால் ஒட்டுமொத்த பங்கு சந்தையும் ஆட்டம் கண்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தற்போது மீண்டும் உயர தொடங்கிய நிலையில் பங்குச்சந்தையில் மீண்டு வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் என்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 365 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 165 புள்ளிகள் உயர்ந்து 17760 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.