Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் உயர்ந்து மாலையில் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் குழப்பம்..!

Siva
வியாழன், 19 ஜூன் 2025 (09:45 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று காலை உயர்ந்திருந்த பங்குச்சந்தை, மதியத்திற்கு மேல் திடீரென சரிந்ததால், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் சரிவில் இருந்த நிலையில், தற்போது திடீரென உயர்ந்துள்ளது. இதே நிலை தொடருமா அல்லது மதியத்திற்கு மேல் சரியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இன்றைய பங்குச்சந்தையின் நிலவரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 94 புள்ளிகள் உயர்ந்து 81,540 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 24,800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி 4வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாக்டர். ரெட்டி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் ட்யூட்டியில்..! அண்ணியிடம் சில்மிஷம் செய்த தம்பி!?- அண்ணி குடும்பத்தார் செய்த செயல்!

ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடுதாரரும், நாமினியும் உயிரிழப்பு.. யாருக்கு இழப்பீடு வழங்குவது?

சென்னையில் மெட்ரோ விபத்து.. L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 35 நிமிட பேச்சுக்கு பின் மீண்டும் டிரம்ப்..!

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments