Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் - இஸ்ரேல் போரால் பங்குச்சந்தைக்கு பாதிப்பா? இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (10:26 IST)
கடந்த ஒரு வாரமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் இருந்து வரும் சூழலில் இந்திய பங்குச்சந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் பெரிய அளவில் சரிவு இல்லை என்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில், நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 39 புள்ளிகள் உயர்ந்து 81,617 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 24,873 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? ஈரானுக்கு மட்டும் எதிர்ப்பு நிலவுவது ஏன்?

ஜூலை5ல் உலகம் அழியப்போகிறதா? .. பெண் சாமியார் கணிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி.!

ஈரான் மதகுரு இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்.. ஆனால் கொல்லப்போவதில்லை: டிரம்ப்

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் ஐடி ரெய்டு.. கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள்..!

தந்தையின் பீடி பழக்கத்தால் பறிபோன பிஞ்சு உயிர்! ஆவேசமான தாய் செய்த செயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments