இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தை உயர்வை பதிவு செய்துள்ளதனால், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 315 புள்ளிகள் உயர்ந்து, 82,554 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் இது 83,000 புள்ளிகளை எட்ட வாய்ப்பு இருப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 95 புள்ளிகள் உயர்ந்து, 25,123 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.