இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran
புதன், 9 ஏப்ரல் 2025 (17:39 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று காலை  திடீரென விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்தது. இதனடிப்படையில், ஒரு கிராம் ரூ.8,290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்நிலையில்இந்த  விலை உயர்வு கூட போதாதென்று, பிற்பகலில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை மேலேறியுள்ளது. இன்று மாலை ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்ததில், தற்போது ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு சவரன் ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
அதாவது, ஒரே நாளில் சவரன் தங்கம் ஒரு சவரனுக்கு  ரூ.1,480 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு நேரில் ஆய்வு!

நிதி ஒதுக்கீடு செய்தும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை: தவெக தலைவர் விஜய்..

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென காலவரையறையற்ற உண்ணாவிரதம்.. என்ன காரணம்?

ஐரோப்பிய நாடுகளுடன் போர்!.. ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments