Publish Date: Tue, 23 Feb 2021 (10:57 IST)
Updated Date: Tue, 23 Feb 2021 (11:29 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து, ரூ.35,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.33 அதிகரித்து ரூ.4,428-க்கு விற்பனை ஆகிறது.