Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை- ஒரே நாளில் 304 ரூபாய் உயர்வு !

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:08 IST)
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து சவரன் 29,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருவதால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து 29 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ஒரு பவுனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து 29, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று திங்கள் கிழமை ஒரே நாளில் மேலும் 304 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 29,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 38ரூபாய் உயர்ந்து ரூ. 3718.00 -க்கு விற்பனையாகிறது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை மும்பை சந்தையில் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments