Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பிதுரையை துரத்திய மக்கள்: பிரச்சாரத்தில் பரபரப்பு!!!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (15:56 IST)
வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை பொதுமக்கள் புறக்கணித்து துரத்தி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தான் போட்டியிடும் கரூர் தொகுதி குஜிலியம்பாறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் தம்பிதுரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  
 
எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் ஓட்டு கேட்டு வருவீர்களா என கேள்வி எழுப்பினர். தம்பிதுரை மக்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. தொடர்ச்சியாக மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments