Publish Date: Wed, 27 Mar 2019 (14:01 IST)
Updated Date: Wed, 27 Mar 2019 (15:07 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் மெகாகூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் தேமுதிகவினருக்கு போதுமான ஒத்துழைப்பு தருவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குக் காட்டுக் அக்கறையைக்கூட வட சென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்குக் காட்டுவதில்லை என தேமுதிகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தேர்தல் தேதி நெருங்கிவிட்டதை அடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று தேமுதிகவினர் பெருதும் குறைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் பக்கம் ஒரு அணியினரும், ஈபிஎஸ் பக்கம் ஒரு அணியினரும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவினர் அதிக அக்கரை காட்டாமல் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்குக் கவனம் செலுத்திவருவதாகவும் தேமுதிகவினர் தேர்தல் பார்வை குறித்து அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
webdunia
Publish Date: Wed, 27 Mar 2019 (14:01 IST)
Updated Date: Wed, 27 Mar 2019 (15:07 IST)