Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

திரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
, புதன், 17 ஏப்ரல் 2019 (15:46 IST)
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
மேலும் வண்டலூர் பூங்காவுக்கும் தேர்தல் நாளன்று விடுமுறை விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
 
இந்நிலையில் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை, மதியம்   திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா?