Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டு எல்லாம் ’இரட்டை இலைக்கே’ போகுது - திருமாவளவன் சொல்வது என்ன ?

Advertiesment
ஓட்டு எல்லாம்  ’இரட்டை இலைக்கே’ போகுது -  திருமாவளவன் சொல்வது என்ன ?
, வியாழன், 18 ஏப்ரல் 2019 (14:27 IST)
நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தின்  தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். சிதம்பரம் பாராளுமன்ற திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
ஆனால் அரியலூர் மாவட்டம் அங்கலூர் கிராமத்தை சேர்ந்த திருமாவளவன் தன் தாயாருடன் வந்து அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
 
இந்நிலையில் எந்தப்பட்டனை அழுத்தினாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கே ஓட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறினார்.
 
மேலும் தேர்தல் அதிகாரிகள் இன்று ஒருநாளாவது நேர்மையாக பணியாற்று வாக்குப்பதிவை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் என்ன? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!