Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பு..! தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு..!!

Senthil Velan
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:09 IST)
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
 
18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நாடு முழுவதும் தற்போது  நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும், திரையுலக பிரபலங்களும் வாக்குச்சாவடி மையங்களில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
 
11 மணி நிலவரம்:
 
தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 27.63% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு இடைத்தேர்தலில் 17.09% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments