Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:01 IST)
பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்றும் அனைவரும் கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 
 
தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பதாவது
 
2024 நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுய் வருகிறது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்கை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என  தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி ஆகிய ஆறு மொழிகளிலும் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments