Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை.! சத்யபிரதா சாகு தகவல்..!!

Senthil Velan
திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:29 IST)
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே துணை ராணுவ படை தமிழகம் வருகிறது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலையொட்டி கடந்த வாரம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்றார். மேலும் தேர்தலை ஒட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
 
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே துணை ராணுவ படை தமிழகம் வருகிறது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

ALSO READ: காலி மனை வாங்கப் போகிறீர்களா..? உங்களுக்கான முக்கிய உத்தரவு..!!
 
முதற்கட்டமாக மார்ச் முதல் வாரத்தில் 40 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வர உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments