Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேப்டன் சாயலில் இருக்கும் அண்ணனை வெற்றி பெற செய்யுங்கள்..! அண்ணனுக்காக களத்தில் இறங்கிய சண்முக பாண்டியன்...!!

Shanmuga Pandiyan

Senthil Velan

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (16:03 IST)
என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம், அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என் அண்ணனுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தாலும் என்னுடைய அப்பா ஆத்மா சாந்தி அடையும்  என்று விஜய பிரபாகரன் தம்பி சண்முக பாண்டியன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்‌. 
 
முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
பாவடிதோப்பு, காந்தி மைதானம், வேலாயுதபுரம், சிவன் கோவில்,  சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, ராமசாமிபுரம், எம்எஸ் கார்னர், வெள்ளக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 
 
அப்போது காந்தி மைதானம் பகுதியில் சண்முக பாண்டியனை காண வந்த பெண் ஒருவர் அவரை கண்டதும் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு பெண் குழந்தை ஒருவர் தனக்கு பிறந்தநாள் எனக் கூறி சண்முக பாண்டியனுக்கு இனிப்புகள் வழங்கினார்.‌ இனிப்புகளை பெற்றுக் கொண்ட சண்முக பாண்டியன் அந்த குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.‌
 
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சண்முக பாண்டியன், இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரம் என்றார். என்னுடைய அண்ணனுக்காக நான் வந்திருக்கிறேன்  என்றும் ஒரு முறையாவது எனது அப்பாவை வெற்றிபெற வைத்திருக்கலாம் என மக்கள் வருத்தப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம், அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெற வைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும் என்று சண்முக பாண்டியன் கூறினார்.
 
இந்த மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அதை என்னுடைய அண்ணன் இந்த தொகுதியில் இருந்தே மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அதை தீர்த்து வைப்பார் என்று அவர் உறுதியளித்தார். 
உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, மகனாக விஜய பிரபாகரன் நிற்கிறார் என்றும் அவருக்காக நீங்கள் முரசு சின்னத்திலே வாக்களியுங்கள் என்றும் சண்முக பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!