Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடு பிடிக்கும் தேர்தல் களம்..! தமிழகம் வந்தார் ராகுல் காந்தி..!

Senthil Velan
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:43 IST)
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் வரவேற்பளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி புறப்பட்டு சென்றார். இந்தியா கூட்டணி சார்பில் இன்று மாலை  திருநெல்வேலி பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

ALSO READ: லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்து..! சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு..!!
 
தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோவை செட்டிபாளையம் எல். அண்டு டி பைபாஸ் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments