Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்..! நாளை மறுநாள் வாக்குப்பதிவு..!!

Senthil Velan
புதன், 17 ஏப்ரல் 2024 (18:01 IST)
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற வந்த தேர்தல் பிரச்சாரம்  மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி  21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6  மணியுடன் முடிவடைந்தது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக திருமதி.பிரேமலதா விஜயகாந்த் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ALSO READ: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிப்பு..!
 
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments