Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் போட்டி.! தொல்.திருமாவளவன் அறிவிப்பு..!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (15:42 IST)
மக்களவைத் தேர்தலில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மாநில செயற்குழு நிர்வாகிகளுடன் தொல்.திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், கேரளாவில் மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
தெலுங்கானாவில் பத்து தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்றும்  ஆந்திராவில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்படும் என்றும் கூட்டணி குறித்து ஆந்திராவில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தொல்.திருமாவளவன் கூறினார். கர்நாடகாவில் ஆறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார். 

ALSO READ: புதுச்சேரியில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு..! உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!!
 
மேலும் திமுகவிடமிருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என  தெரிவித்த திருமாவளவன், மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும்  எண்ண வலியுறுத்தி மார்ச் 10 ஆம் தேதிக்கு பின் தென் மாநிலங்களில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments