Publish Date: Thu, 23 May 2019 (11:10 IST)
Updated Date: Thu, 23 May 2019 (11:15 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
திருப்போரூர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்குபெட்டியில் திமுக கட்சிக்கு வெறும் இரண்டு வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாக திமுக முகவர்கள் புகார் அளித்ததன் பேரில் சட்டசபை வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பாராளுமன்ற வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன.