Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாட்டில் ராகுல் மனுத்தாக்கல் – மக்கள் உற்சாக வரவேற்பு !

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:44 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மற்றொரு தொகுதி என்ற கேள்விக்குப் பல தொகுதிகள் யூகங்களாக சொல்லப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் கூட அவர் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல்  செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த் அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார். கேரளாவில் மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments