Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியங்காகாந்தி சாமி கும்பிட்டபோது 'மோடி வாழ்க' என கோஷம்: மும்பையில் பரபரப்பு

பிரியங்காகாந்தி சாமி கும்பிட்டபோது 'மோடி வாழ்க' என கோஷம்: மும்பையில் பரபரப்பு
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (08:35 IST)
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பிரியங்கா சாமி கும்பிட்டபோது அங்கிருந்த பக்தர்கள் 'மோடி வாழ்க' என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்ததும் உண்டு
 
இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பிரியங்கா காந்தி, அங்கு புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். தானே கற்பூரம் ஏற்றி விநாயகருக்கு அவர் தீபாராதனை காட்டினார். பிரியங்கா, சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பாஜகவினர், கோவிலும் முன் கூடி 'மோடி வாழ்க' என கோஷமிட்டனர். பிரியங்கா காந்தி முன்னரே 'மோடி வாழ்க' என பெண்கள் உள்பட பொதுமக்கள் கோஷமிட்டதால் காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஏதும் விபரீதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புக்கு இருந்தனர். 
 
webdunia
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அங்கு மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் வரும் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த பிரதமர் மோடியும் இல்லை, ராகுலும் இல்லை: டிடிவி தினகரன்