Publish Date: Wed, 03 May 2017 (17:42 IST)
Updated Date: Wed, 03 May 2017 (17:47 IST)
சமீபத்தில் வெளியான பிரம்மாண்டப் படத்தின் இரண்டாம் பாகத்தால், ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் என எல்லாத் தரப்பினரும் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள். ஆனால், தகதக நடிகை மட்டும் உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தவிக்கிறாராம்.
முதல் பாகத்தில் முக்கியத்துவம் கொடுத்தவர்கள், இரண்டாம் பாகத்தில் ஊறுகாய் போல இலை ஓரத்தில் வைத்ததுதான் காரணமாம். இரண்டாம் பாகத்திலும் உனக்கு முக்கியத்துவம் இருக்கு என்று சொல்லி, இரண்டே காட்சிகளை மட்டும்தாம் படத்தில் வைத்தாராம் இயக்குநர். இதனால், வெளியில் சொல்ல முடியாமல் வாய்க்குள்ளேயே அழுகிறாராம் நடிகை.