Publish Date: Wed, 17 Jul 2019 (19:01 IST)
Updated Date: Wed, 17 Jul 2019 (19:06 IST)
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்-ல், ”யூபிஐ” சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது. தற்சமயம் இச்சேவைக்கான வெளீயீடு, இந்திய அரசு கட்டுபாடுகளால் தாமதமாகி வருகிறது. மேலும் இச்சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.